மும்பை

துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா

துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மும்பை, 

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைமைக்கு எதிராக அசாமில் முகாமிட்டு உள்ளதால் மராட்டிய அரசியலில் பரபரப்பு நிலவிவருகிறது. இந்தநிலையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

நேற்று எனக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் நன்றாக உள்ளேன். டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறேன். உங்கள் ஆசிர்வாதத்துடன் விரைவில் கொரோனாவை வீழ்த்தி, பணிக்கு திரும்புவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கவனமாக இருக்கவும். தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து