ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா: நாளை கொடியேற்றம்

விழா நாட்களில் தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன.

தினத்தந்தி

திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது. அதையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை தனுர் லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து இரவு சிறிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை பெரிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 19-ந்தேதி முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 20-ந்தேதி கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமந்த வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு சிகர நிகழ்ச்சியாக யானை வாகன வீதிஉலா நடக்கிறது.

22-ந்தேதி காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 24-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 25-ந்தேதி காலை பஞ்சமி தீர்த்தம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கின்றன. வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து 26-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்