மண்டியா:
மண்டியா மாவட்டத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்தார். பெங்களூருவில் சில வியாபாரிகளை சந்தித்து பணத்தை வாங்கி கொண்டு, மண்டியாவுக்கு நள்ளிரவு நந்தினி லே-அவுட் வழியாக அவர் காரில் சென்றார். அப்போது மற்றொரு காரில் வந்த மர்மநபர்கள், வியாபாரியின் காரை வழிமறித்து அவரை கடத்தி சென்று அவர் வைத்திருந்த ரூ.24 லட்சம், 6 வங்கி காசோலைகள் மற்றும் செல்போனை மாமநபர்கள் கொள்ளையடித்து கொண்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் நந்தினி லே-அவுட் போலீசார் வைர வியாபாரியிடம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாக இருந்த 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் நாராயணா (வயது 55), உமேஷ் (37), நூதன் (37) என்று தெரிந்தது. இவர்களில் நாராயணா ரவுடி ஆவார்.