மாவட்ட செய்திகள்

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு குறித்து பயப்படவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தாம்பரம்,

ஈஷா பசுமை பள்ளி இயக்கம் தமிழக பள்ளி கல்வி துறையுடன் இணைந்து பசுமை பள்ளி என்னும் சுற்றுச்சூழல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மரக்கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 35 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருது வழங்கும் விழா நடைபெற்றது.