தொழில்நுட்பம்

இரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர்

சாம்சங் நிறுவனம் பிஸ்போக் என்ற பெயரிலான இரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

மாறிவரும் நாகரிக உலகில் இல்லத்தரசிகளின் தேவையும் மாறிவருகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகம் உள்ள வீடுகளுக்கு இரட்டை கதவு உடைய ரெப்ரிஜிரேட்டர் அவசியமாக உள்ளது. அதை ஈடு செய்யும் வகையில் சாம்சங் நிறுவனம் பிஸ்போக் என்ற பெயரிலான இரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

ஐந்து அம்சங்கள் ஒருங்கே கொண்டதாக வந்துள்ளது. இதில் உள்ள பிரீஸர் பகுதியை தேவைக்கேற்ப பிரிட்ஜாக மாற்றும் வசதி உள்ளது. இதனால் கூடுதலான பொருட்களை வைக்க முடியும். இதில் இரட்டை குளிர்விப்பு தொழில்நுட்பம் உள்ளதால், இதில் வைக்கப்படும் பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதனால் உணவுப் பொருட்கள் வீணாவது தவிர்க்கப்படும். ஐந்து விதமான செயல்பாடுகள் (நார்மல், சீசனல், எக்ஸ்ட்ரா பிரிட்ஜ், வெகேஷன் மற்றும் ஹோம் அலோன்) உள்ளன. ரெப்ரிஜிரேட்டர்களின் விலை சுமார் ரூ.30,500 முதல் ஆரம்பமாகிறது.

SCROLL FOR NEXT