மாவட்ட செய்திகள்

கே.ஆர்.பேட்டை தொகுதி வேட்புமனு தாக்கலின்போது பா.ஜனதா வேட்பாளர் மீது செருப்பு வீச்சு எதிர்ப்பு கோஷம்-பரபரப்பு

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற பா.ஜனதா வேட்பாளர் நாராயணகவுடா மீது செருப்பு வீசப்பட்டது. மேலும் எதிர்ப்பு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்டியா,

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. நாராயணகவுடா பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். இவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய மந்திரி மாதுசாமி மற்றும் ஆதரவாளர்களுடன் கே.ஆர்.பேட்டை தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தார்.

ஏற்கனவே அங்கு காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகர், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பி.எல்.தேவராஜூ ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்து இருந்தனர். ஒரே நேரத்தில் 3 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஒன்றாக கூடியதால் தாலுகா அலுவலகம் முன்பு கூட்டம் அலைமோதியது.