கல்வி/வேலைவாய்ப்பு

என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல்; மேலும் 93 மாணவர்கள் சேர்ப்பு

ஏற்கனவே கடந்த 27-ந்தேதி வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலுடன் மேலும் 93 மாணவர்கள் இணைக்கப்பட உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக்., பட்டப்படிப்புக்கான 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு 3.02 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், கலந்தாய்வில் பங்கேற்க தகுதியான 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த மாதம் (ஜூன்) 27-ந்தேதி வெளியிடப்பட்டது.

தரவரிசை பட்டியல் குறைகளுக்கு நிவர்த்தி காண மாணவர்கள் சேவை மையங்களை அணுக ஜூன் 28-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை குழு அவகாசம் வழங்கியது. கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், தரவரிசை பட்டியல் தொடர்பாக முறையிட்ட மாணவர்களில் 93 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றிருப்பதாக என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்திருக்கிறது. இதன்மூலம், ஏற்கனவே கடந்த 27-ந்தேதி வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலுடன் மேலும் 93 மாணவர்கள் இணைக்கப்பட உள்ளனர்.

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி