Image Credits: Grok AI 
கல்வி/வேலைவாய்ப்பு

பெடரல் வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: அருமையான வாய்ப்பு

ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்று பெடரல் வங்கி. கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பெடரல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் பின்வருமாறு;

பணியிடங்கள்: அசோசியேட் அதிகாரி (விற்பனை)

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்; தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4.64 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.6.70 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை: குழு விவாதம், திறனறித் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 04 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.federal.bank.in/careers