கல்வி/வேலைவாய்ப்பு

நெட் தேர்வு டிசம்பர் 31-ந்தேதி தொடக்கம்; தேசிய தேர்வுகள் முகமை தகவல்

83 பாடங்களுக்கான நெட் தேர்வுகள் டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 7-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஓராண்டில் ஜூன், டிசம்பர் என இருமுறை கணினி வழியில் நெட் தேர்வு நடைபெறும். இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.

அதன்படி 2025-ம் ஆண்டின் முதல் பருவத்துக்கான தேர்வு, கடந்த ஜூன் 25-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூலை 22 அன்று வெளியிடப்பட்டன.

இதனை தொடர்ந்து, நடப்பாண்டு 2-ம் கட்ட டிசம்பர் பருவத்துக்குரிய நெட் தேர்வுக்கான அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நெட் தேர்வுக்கான கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி 83 பாடங்களுக்கான நெட் தேர்வுகள் டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 7-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன.

இதுசார்ந்த கூடுதல் தகவல்களை ugcnet.nta.nic.in/www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/40759000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து