கல்வி/வேலைவாய்ப்பு

இடைநிலை ஆசிரியர் தேர்வு: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள்

சரிபார்ப்பு செயல்முறையை சீராகவும் வெளிப்படையாகவும் நடத்துவதை தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் உறுதி செய்கிறது.

தினத்தந்தி

சென்னை,

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறையை தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் நேற்று தொடங்கியது. 2-வது நாளாக இன்று நடைபெற்று வரும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், நாளையுடன் முடிவடைகிறது.

இந்த செயல்முறை நான்கு மையங்களில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மையமும் காலை அமர்வில் 140 போட்டியாளர்களையும் பிற்பகல் அமர்வில் 140 போட்டியாளர்களையும் சரிபார்க்கிறது. மொத்தம் ஒரு மையத்திற்கு ஒரு நாளைக்கு 280 போட்டியாளர்கள் என மூன்று நாட்களில், மொத்தம் 3,351 போட்டியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு உட்படுவார்கள்.

நியாயமான மற்றும் சரியான நேரத்தில் ஆட்சேர்ப்பு செய்ய வசதியாக சரிபார்ப்பு செயல்முறையை சீராகவும் வெளிப்படையாகவும் நடத்துவதை தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் உறுதி செய்கிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்