கல்வி/வேலைவாய்ப்பு

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

என்ஜினீயரிங் படிப்புக்காக இதுவரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் மே 7-ந்தேதி தொடங்கியது. இதுவரை, 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணபித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. ஜூன் 4-ந்தேதி (நேற்று) மாலை 6மணி நிலவரப்படி, 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 337 மாணவர்கள், 1 லட்சத்து 5 ஆயிரத்து 395 மாணவிகள் என மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், நாளைக்குள் (வெள்ளிகிழமை) ww.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி