முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரத்தை சேர்ந்தவர் பண்டாரம் (வயது 51). இவர் கோபாலசமுத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 24-ந் தேதி தனது வீட்டு மாடியில் இருந்து பேசிக் கொண்டிருந்த பண்டாரம் திடீரென கீழே தவறி விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவர் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பண்டாரம் பரிதாபமாக இறந்தார்.