புதுச்சேரி

கட்டணம் செலுத்த தவறினால் மின்சாரம் துண்டிப்பு

கட்டணம் செலுத்த தவறினால் மின்சாரம் துண்டிக்கப்படும் என புதுவை மின்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை மின்துறை பராமரித்தல் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மின்துறை கிராமம் வடக்கு கோட்டத்திற்கு கீழ் இயங்கும் வில்லியனூர், பூமியான்பேட், லாஸ்பேட், கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனூர், காட்டேரிகுப்பம் உள்ளிட்ட அதை சுற்றியுள்ள பகுதி மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டண பாக்கியை கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மின்சாரம் துண்டிக்கப்படும். எனவே, கடைசி தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து