மாவட்ட செய்திகள்

பெண் தற்கொலை

பெண் தற்கொலை செய்துகொண்டார்.

ஆர்.எஸ்.மங்கலம்,

கொடிக்குளம் ஊராட்சி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மாலா (வயது35). கணேசன் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாலா விஷம் தின்று தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.