வில்லியனூர்
வில்லியனூர் அருகே உள்ள மங்கலம் சுப்ரீம் நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 50). அவரது மனைவி ரஞ்சனி (35). இவர் மங்கலம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். ஆனால் அங்கு வேலைக்கு செல்வதை குப்புசாமி கண்டித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரஞ்சனி வீட்டில் உள்ள ஒரு அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.