புதுச்சேரி

வேளாண்மை படிப்பில் சேர இறுதிகட்ட கலந்தாய்வு

சென்டாக் சார்பில் காரைக்கால் வேளாண்மை படிப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நடக்கிறது.

தினத்தந்தி

காரைக்கால்

சென்டாக் சார்பில் காரைக்கால் பஜன்கோ வேளாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பி.எஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு (மாப்-அப்) நாளை மறுநாள்  (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. அதாவது பிற மாநிலத்தவருக்கான சுயநிதி இடங்களுக்கான கலந்தாய்வில் 99.999 மதிப்பெண் முதல் 70 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பங்கு பெறலாம். 10.45 மணிக்கு நடக்கும் கலந்தாய்வில் 69.999 முதல் 40 மதிப்பெண் வரை பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்.கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் புதுவை காமராஜர் மணிமண்டபம், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, மாகி மகாத்மாகாந்தி கலைக்கல்லூரி, ஏனாம் டாக்டர் எஸ்.ஆர்.கே. கலைக்கல்லூரியில் உள்ள அலுவலகங்களில் கலந்தாய்வு நடக்கும் 30 நிமிடத்துக்கு முன்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும். கலந்தாய்வின்போது விண்ணப்ப நகல், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட கலந்தாய்வு தொடர்பான சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.மேற்கண்ட தகவலை சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து