மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர்களுக்காக சென்னை அண்ணாநகரில் 606 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் கட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கான 606 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகளை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

சென்னை,

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்த அரசு ஊழியர்களுக்கான 126 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் பழுது காரணமாக இடிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வாடகைக் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் ரூ.200 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அந்த இடத்தில் அரசு ஊழியர்களுக்காக 606 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.