மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பில் உள்ள மயான நிலத்தை மீட்டுத்தர கோரிக்கை

ஆக்கிரமிப்பில் உள்ள மயான நிலத்தை மீட்டுத்தர கோரிக்கை

பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட, ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது வரை இந்த ஊருக்கு மயான அடக்கம் செயயஇடம் கிடையாது. இறந்தவர்களின் உடல்களை நீர்நிலை பகுதிகளில் அடக்கம் செய்து வந்ததாகவும், இந்த சூழ்நிலையில், பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பிய காரணத்தால், பிணங்களை அடக்கம் செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளவதாகவும், ஆதலால் பெருமாநல்லூர் ஊராட்சிக்கு சொந்தமான திருப்பூர் சாலையில் தனியார் ஆக்கிரமிப்பிலுள்ள மயான நிலத்தை மீட்டு மயானம் அமைத்து தர வேண்டும் என்று கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.