மும்பை

காட்கோபர் பூங்காவில் குஜராத்தி பெயர் பலகை உடைப்பு - உத்தவ் தாக்கரே கட்சியினர் ஆவேசம்

காட்கோபர் பகுதியில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டிருந்த குஜராத்தி பெயர் பலகையை உத்தவ் தாக்கரே கட்சியினர் உடைத்தனர்

தினத்தந்தி

மும்பை, 

முல்லுண்டு பகுதியில் சமீபத்தில் குஜராத்தியர்கள் அதிகம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் மராத்தி பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் காட்கோபர் பகுதி பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த குஜராத்தி மொழி பெயர் பலகையை உத்தவ் தாக்கரே சிவசேனாவினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்கோபர் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் "மரு காட்கோபர்" (எனது காட்கோபர்) என குஜராத்தி மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெயர் பலகையை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவினர் உடைத்து அகற்றி உள்ளனர். மேலும் அவர்கள் அந்த இடத்தில் ஜெய் மஹாராஷ்டிரா, (எனது மஹாராஷ்டிரா) என மராத்தியில் போஸ்டர் வைத்துவிட்டு சென்றனர். அந்த போஸ்டரை போலீசார் அகற்றினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து