புதுச்சேரி

தொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

நெடுங்காடு

காரைக்காலில் செல்போன்களை தவற விட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ உடனடியாக அந்தந்த போலீஸ் நிலையத்தில் அல்லது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் நிதின் கவ்ஹால் ரமேஷ், சுப்பிரமணியம் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நெடுங்காடு பகுதியை சோந்தவர்கள் தங்களது செல்போன்களை தவறவிட்டது தொடாபாக போலீசில் புகார் அளித்தனர். அதன்போல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் தொலைந்து போன செல்போன்களின் ஐ.எம்.இ. எண்களை வைத்து விசாரணை நடத்தி, மீட்டனர். இந்த செல்போன்கள் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் ஒப்படைத்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்