மாவட்ட செய்திகள்

மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையை சேர்ந்தவர் சபரிராஜ் (வயது 50). இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் ரெவின்யூ சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.