மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் கனமழை எதிரொலி; என்ஜினீயரிங் கல்வி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

மராட்டியத்தில் என்ஜினீயரின் கல்வி சேர்க்கைக்கு “கேப்” எனப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கான 2-வது சுற்றின் அவகாசம் நேற்றுடன் முடிந்தது.

மும்பை,

மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் கனமழை பெய்துவருவதை கருத்தில் கொண்டு இந்த இரண்டாவது சுற்றுக்கான அவகாசம் நாளை (திங்கட்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மாநில உயர்கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே தெரிவித்தார்.