மாவட்ட செய்திகள்

உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

நெடுங்குன்றம் கிராமத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை கைவிடக்கோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

செங்கல்பட்டு,

நெடுங்குன்றம் கிராமத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியை கைவிடக்கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

வண்டலூர் வட்டம் நெடுங்குன்றம் கிராமம் அசோக் நகர் என்ற மனைப்பிரிவு 1882-ம் ஆண்டு 450 மனை பிரிவுகளுடன் உருவாக்கப்பட்டது. பின்னர் பல நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.