புதுச்சேரி

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோவிலில் நிலத்தை மீட்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்கால் கீழ காசாக்குடி பகுதியில் அரசு இந்து அறநிலையத் துறைக்குட்பட்ட பழமைவாய்ந்த ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பல்வேறு தரப்பினர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து காரைக்கால் மாவட்ட இந்து முன்னணியினர் மற்றும் ஆதிபுரீஸ்வரர் தேவஸ்தான சொத்து மீட்புக் குழு சார்பில் காரைக்கால் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.

நகர தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கோவில் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை