மாவட்ட செய்திகள்

சோழிங்கநல்லூரில் 20 அடி உயரத்தில் இருந்து கால்வாய்க்குள் பாய்ந்த கார் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்

சோழிங்கநல்லூரில் 20 அடி உயரத்தில் இருந்து கால்வாய்க்குள் கார் பாய்ந்தது. இதில் காரில் இருந்த கல்லூரி மாணவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சோழிங்கநல்லூர்,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் விறுக்குமார் (வயது 22), அஜய் (22), இவர்கள் இருவரும் விடுதியில் தங்கி சென்னை வடபழனியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் இருவரும் காரில் கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதிக்கு செல்வதற்காக சோழிங்கநல்லூரில் இருந்து இ.சி.ஆர் இணைப்புசாலையில் வந்து கொண்டிருந்தனர். விறுக்குமார் காரை ஓட்டினர். அஜய் காரில் அமர்ந்திருந்தார்.