மாவட்ட செய்திகள்

திருச்சி மாநகரில் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமருபவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்

திருச்சி மாநகரில் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இல்லையென்றால் வழக்கு பதியப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளார்.

திருச்சி,

பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்லும்போது, இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற அரசின் ஆணையை முழுமையாக நடைமுறைப்படுத்த சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.