துருவங்கள் பதினாறு என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் கார்த்திக் நரேன் தற்போது, நரகாசுரன் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். அதில், அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்தை அறிவித்து இருக்கிறார். அவர் டைரக்டு செய்யும் அடுத்த படத்தின் பெயர், நாடக மேடை. இந்த படத்தில், யாரும் எதிர்பாராத-யூகிக்க முடியாத நட்சத்திர கூட்டணி இடம் பெறும் என்கிறார், கார்த்திக் நரேன்!