மாவட்ட செய்திகள்

33 பேருக்கு கொரோனா

மேலும் 33 பேருக்கு கொரோனா

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள், அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சைக்காக திருப்பூர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 652 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 224 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 18,244 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.