புதுச்சேரி

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு சிறந்த செயல் திட்டத்தை உருவாக்கிய அரசு பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

புதுச்சேரி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேவையான செயல் திட்டம் உருவாக்குவதில் புதுவை மாநில அளவில் 7 தனியார் பள்ளிகள் மற்றும் 2 அரசு பள்ளிகளின் செயல் திட்டம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் இந்திராநகரில் உள்ள இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் நிரோஷா, தீபிகா ஆகியோர் உருவாக்கிய செயல் திட்டமும் ஒன்றாகும்.

தேசிய அளவில் சிறந்த செயல் திட்டத்தை உருவாக்கிய மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் துணை முதல்வர் சந்திரன் கலந்துகொண்டு மாணவிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியை அன்பரசி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் கவர்னர் மாளிகையில் நடந்த மாணவர்கள் திறன் அறிதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர் சிவராமு என்பவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்பாசிரியர் மணிமொழி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்