நச்சலூர்
நச்சலூர் பகுதியில் சிலர் மது விற்பதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் குளித்தலை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மது விற்ற திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த பெருங்குடி பகுதியைச் சேர்ந்த காமராஜ் (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.