பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் விக்டர் சந்திரபால். இவருடைய மகன் ஐசக் (வயது 35) ஆண் செவிலியராக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் வீட்டின் மேல்மாடியில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த கேபிள் வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.