மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தில் குரங்குகள் தொல்லையால் சுற்றுலா பயணிகள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை நாள்தோறும் மாதா கோவில் தெரு, வேதாசலம் நகர், அம்பேத்கர் தெரு, அண்ணாநகர், ஒத்தவாடை தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து பழங்கள், தின்பண்டங்களை தூக்கி சென்று விடுகின்றன. சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.