மாவட்ட செய்திகள்

மாம்பலம் ரெயில் நிலையத்தில் பரிதாபம் பெற்றோர் கண்எதிரே மின்சார ரெயில் மோதி சிறுவன் பலி

மாம்பலம் ரெயில் நிலையத்தில் பெற்றோர் கண் எதிரே மின்சார ரெயில் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண்கோபால். தொழில் அதிபர். இவருடைய மகன் ஆதித்யா(வயது 9). அருண்கோபால் தனது குடும்பத்துடன் சென்னை தியாகராயநகர் வந்தார்.

பின்னர் மீண்டும் மின்சார ரெயிலில் வீட்டுக்கு செல்வதற்காக மாம்பலம் ரெயில் நிலையம் வந்தார். சிறுவன் ஆதித்யா, மாம்பலம் ரெயில் நிலைய நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்தான்.