திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய தேவர்குளத்தை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
மேற்சொன்ன ஜெகதீஷ் நீதிமன்ற விசாரணைக்கு 3 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஜெகதீைஷ தேவர்குளம் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.