புதுச்சேரி

சிமெண்டு கலவை வாகனம் மோதி கொத்தனார் பலி

காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது சிமெண்டு கலவை வாகனம் மோதி கொத்தனார் பலியானார்.

தினத்தந்தி

காரைக்கால்

மோட்டார் சைக்கிளில் சென்றபோது சிமெண்டு கலவை வாகனம் மோதி கொத்தனார் பலியானார்.

கொத்தனார்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் மேலையூர் பகுதியைச்சேர்ந்தவர் செபஸ்தியன் (வயது20). கொத்தனார். இன்று பகலில் வேலை விஷயமாக திரு-பட்டினத்திற்கு மோட்டார் சைக்களில் சென்றார். பின்னர் வேலையை முடித்துக்கொண்டு திட்டச்சேரி சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

திட்டச்சேரி சாலையில் ஒரு வளைவில் திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் மீது சிமெண்டு கலவை எந்திர வாகனம் மோதியது.

உடல் நசுங்கி பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த செபஸ்தியன் வாகன சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

விபத்து குறித்து திரு-பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய வாகன டிரைவர் திருமுருகனை தேடிவருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை