மும்பை

எம்.எல்.ஏ. காணாமல் போனதாக மனைவி போலீசில் புகார்

எம்.எல்.ஏ. காணாமல் போனதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை, 

சிவசேனா தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத் மாநிலம் சூரத் ஓட்டலில் தங்கி உள்ளனர். இதில் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினரே அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் அகோலாவில் உள்ள பாலாப்பூர் தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. நிதின் தேஷ்முக்கை காணவில்லை என அவரது மனைவி பிரன்ஜாலி தேஷ்முக் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் அகோலா சிவில் லைன்ஸ் போலீசில் அளித்த புகாரில் நேற்று ம இரவு முதல் அவரது கணவர் நிதின் தேஷ்முக்கை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

இதற்கிடையே குஜராத் சென்ற நிதின் தேஷ்முக் எம்.எல்.ஏ. உடல் நல பாதிப்பு காரணமாக சூரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது