மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

ஓசூர்:

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோகுல் (வயது 22). இவர் கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 31-ந் தேதி அதிகாலையில் அவர் வீடு அருகில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஒருவர் ஜோகுலை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.200-ஐ கத்திமுனையில் பறித்து சென்றார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் ஜோகுலை மிரட்டி பணம் பறித்தது சூர்யா (21), ஓசூர் ஒன்னல்வாடி சோமநாதபுரத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது. மேலும் அவர் மீது ஓசூர் டவுன் போலீசில் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.