கூடைப்பந்து

தேசிய கூடைப்பந்து போட்டி: இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி

68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

ஆண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த அரைஇறுதியில் தமிழக அணி 90-72 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது. தமிழக அணியில் அசத்திய அரவிந்த் 24 புள்ளிகள் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் சர்வீசஸ் அணி 93-65 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை விரட்டியது. இன்று நடக்கும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் தமிழகம்-சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே அணி 76-63 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் கேரளாவையும், சத்தீஷ்கார் அணி 79-78 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை மயிரிழையில் வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் ரெயில்வே- சத்தீஷ்கார் அணிகள் மோதுகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு