புதுச்சேரி

பருத்தி வயலில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி

காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயலில் விவசாயிகள் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.

தினத்தந்தி

காரைக்கால்

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுமாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் அறிவுறுத்தினர். இதை ஏற்று காரைக்கால் மாவட்டத்தில், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் தங்களது வீடுகளிலும், அலுவலங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயலில் விவசாயிகள் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். இதேபோல் பலரும் தங்கள் வயல்களில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர். வயல்களில் பட்டொளி வீசி தேசியக்கொடி பறப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்