மும்பை

கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள் பற்றி கருத்து கூற முடியாது - கிரித் சோமையா பேட்டி

கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள் பற்றி கருத்து கூற முடியாது என கிரித் சோமையா கூறியுள்ளார்.

மும்பை, 

கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள் பற்றி கருத்து கூற முடியாது என கிரித் சோமையா கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள்

பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அஜித்பவார், சகன் புஜ்பால், சுனில் தட்காரே, ஹசன் முஷ்ரிப் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியவர் ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்கும் அடிக்கடி செல்வார். குறிப்பாக அஜித்பவார் ஊழல் வழக்கில் சிறைக்கு செல்வார் என பலமுறை கூறியுள்ளார். இந்தநிலையில் கிரித் சோமையா ஊழல் குற்றச்சாட்டு கூறிய அஜித்பவார் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இணைந்து மந்திரிகளாக பதவி ஏற்று உள்ளனர்.

கிரித் சோமையா கருத்து

சமீபத்தில் கிரித் சோமையாவிடம் பா.ஜனதா கூட்டணி அரசில் அஜித்பவார் இணைந்தது குறித்து கருத்து கேட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தபடி சென்றார். இந்தநிலையில் நேற்று கிரித் சோமையா நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்து கூறுகையில், "அவர்களுக்கு (அஜித்பவார் உள்ளிட்டவர்கள்) எதிராக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே அதுகுறித்து தற்போது கருத்து கூறுவது சரியாக இருக்காது. நான் எனது கடமையை செய்தேன். நான் ஒழுக்கமான கட்சி தொண்டன்" என்றார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு