மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் விவசாயி தற்கொலை

உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பாப்பநல்லூர் திருவேங்கிடபுரத்தை சேர்ந்தவர் செங்கல்வராயன். இவரது மகன் கோவிந்தசாமி (வயது 44). விவசாயி. இவர் தினமும் மது குடித்து தனது மனைவி சுந்தரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்கோவிந்தசாமி மது குடித்துவிட்டு தனது மனைவி சுந்தரியிடம் தகராறு செய்தார்.