மாவட்ட செய்திகள்

பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீர் தீ விபத்து டிரைவர் உடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு

பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் கன்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் டிரைவர் உடலில் தீப்பிடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பூந்தமல்லி,

உத்தரபிரதேச மாநிலம், கேராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சிங்(வயது 33). தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தான் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரிக்கு டீசல் நிரப்புவதற்காக வந்தார்.