மாவட்ட செய்திகள்

சுரண்டை அருகே, போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார்: ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியல்

சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் உயிரிழந்த ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் நேற்று 2-வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சுரண்டை,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் குமரேசன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 13-ந் தேதி உடல் நலக்குறைவால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவரது உடல் நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை வார்டில் வைக்கப்பட்டு இருந்தது.