செய்திகள்

25 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறன் கொண்டவர்களும் வாழ்வில் முன்னேறும் வகையில் அவர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மூன்று சக்கர ஸ்கூட்டர் போன்றவை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பயண அட்டை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்