செய்திகள்

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 3 பேர் பலி

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

சிகாகோ,

அமெரிக்காவின் இலினாஸ் மாகாணத்தில் லிங்கன் டவுன்ஷிப் அருகே உள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. தரையில் மோதிய உடனேயே அந்த விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனால் அதில் இருந்த 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த நேரத்தில் சாலையில் வேறு எந்த வாகனமும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. விபத்தில் சிக்கிய விமானம் 4 இருக்கைகள் கொண்ட செஸ்னா 172 வகையை சேர்ந்ததாகும்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்