சிகாகோ,
அமெரிக்காவின் இலினாஸ் மாகாணத்தில் லிங்கன் டவுன்ஷிப் அருகே உள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. தரையில் மோதிய உடனேயே அந்த விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனால் அதில் இருந்த 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த நேரத்தில் சாலையில் வேறு எந்த வாகனமும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. விபத்தில் சிக்கிய விமானம் 4 இருக்கைகள் கொண்ட செஸ்னா 172 வகையை சேர்ந்ததாகும்.