செய்திகள்

பஸ் கவிழ்ந்து 35 புலம்பெயர் தொழிலாளர்கள் படுகாயம்

பஸ் கவிழ்ந்து 35 புலம்பெயர் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

லக்னோ,

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இமாசலபிரதேசத்தின் ஹபிர்புர் நோக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு பஸ்சில் நேற்று முன்தினம் சென்று கொண்டு இருந்தனர். உத்தரபிரதேசத்தில் உள்ள இடாநகர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.

அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் சத்தம் போட்டனர். அலறல் சத்தம் கேட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அனைவரையும் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 35 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து