செய்திகள்

பாகிஸ்தானில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி

பாகிஸ்தானில் பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலையில் இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, அங்கு பணியில் இருந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் தொழிற்சாலையின் ஒருபகுதி சேதமடைந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், தொழிற்சாலையின் மற்ற பிரிவுகளில் பணியில் இருந்த ஊழியர்கள் உயிர் தப்பினர். முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் பாய்லர் வெடித்து இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. எனினும் சரியான காரணத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை