செய்திகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஐஸ் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு சொந்தமான ஐஸ் தொழிற்சாலை, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ளது. நேற்று இந்த ஐஸ் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியா சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் நெடியுடன், லேசான கண் எரிச்சல் ஏற்பட்டது.

தினத்தந்தி

உடனடியாக அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களும், அக்கம் பக்கத்தினரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராயபுரம், தண்டையார்பேட்டை, பாரிமுனை ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு உடை அணிந்து ஐஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவை சரிசெய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை