செய்திகள்

அரியானா மாநிலத்தில் சவுதாலா குடும்பத்தின் மற்றொரு வாரிசும் தேர்தலில் போட்டி

அரியானா மாநிலத்தில், சவுதாலா குடும்பத்தின் மற்றொரு வாரிசும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

சண்டிகார்,

மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம்பிரகாஷ் சவுதாலா அரியானா மாநிலத்தில் முன்பு முதல்-மந்திரியாக இருந்தார். அவரது மகன்கள் அஜய் சவுதாலா, அபய் சவுதாலா இந்திய தேசிய லோக் தளம் கட்சியை நடத்திவருகிறார்கள். 4-ம் தலைமுறையினராக அஜய் சவுதாலாவின் மகன்கள் துஷ்யந்த் சவுதாலா, திக்விஜய் சவுதாலா ஆகியோர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

இப்போது சவுதாலா குடும்பத்தின் மற்றொரு வாரிசும், அபய் சவுதாலாவின் மகனுமான அர்ஜூன் சவுதாலாவும் தேர்தல் களத்தில் குதிக்கிறார். 26 வயதாகும் அவர் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கூறும்போது, கட்சி என் தோள் மீது மிகப்பெரிய பொறுப்பை சுமத்தியுள்ளது. கட்சியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பாடுபட முயற்சி மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு