செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 5 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானின் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி


* ஈராக்கின் புதிய பிரதமர் வெளிநாடுகளின் தலையீடு இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அந்த நாட்டின் மூத்த மத குருவான அயத்துல்லா அலி அல் சிஸ்தானி தெரிவித்துள்ளார்.

* ஈரானில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் மோசமான பொருளாதார நிலை காரணமாக அங்கு பணியாற்றி வந்த மற்றும் அகதிகளாக தஞ்சமடைந்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்படை பயிற்சி மையத்தில் 3 மாலுமிகளை சுட்டுக்கொன்ற சவுதி அரேபிய மாணவர் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் வீடியோக்களை பார்த்துவிட்டு, தாக்குதலை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

* இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி பாலஸ்தீனத்தை சேர்ந்த இளம் பெண்ணை இஸ்ரேல் ராணுவத்தினர் கைது செய்தனர்.

* ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பாரா மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்